புலம் பெயர் தமிழ் மக்களே உங்களை ஏமாற்ற

Sunday, February 7, 2010
உதவி………உதவி…….SOS…….SOS…….
புலம் பெயர் தமிழ் மக்களே உங்களை ஏமாற்ற மீண்டும் மிடுக்குடன் கோண்டாவிலில் விலாசமில்லாத அனாமதேய பெயரில் காசு கறக்கும் திட்டத்துடன் ஜேர்மனியில் ஒரு கோண்டாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கவனம் ஏமாந்து விடாதீர்கள். நாம் அடிக்கடி உங்களை மக்குகள் எனச்சொல்வது உங்களை அசௌகரியப்படுத்தும் என்பது எமக்கு தெரியாததும் அல்ல. என்ன செய்வது போலிகளை இனங்காட்ட எமக்கும் வேறு வழி தெரியவில்லை. கடந்த 8மாதங்களுக்கும் மேலாக வன்னியில் உள்ள எமது அருமை மக்களுக்கோ அல்லது நாட்டாற்றில் விடப்பட்டுள்ள அப்பாவிப்போராளிகளுக்கோ அல்லது கைவிடப்பட்ட போராளி , மாவீரர் குடும்பங்களுக்கோ இந்த தேசிய வாரிசுகளிடமிருந்து முன்னர் கையிருப்பில் இருந்த ஒரு சொட்டுப்பணமும் போய்ச்சேரவில்லை என்பதை இத்தருணத்தில் உங்களுக்கு கூற கடமைப்பட்டுள்ளோம்.
எனினும் புதிய வியாபார முயற்சிகள், ஜரோப்பாவில் புதிய தொலைக்காட்சி தொடங்குதல், வட்டுக்கோட்டை தேர்தல், மக்கள் பேரவை தேர்தல், நாடு கடந்த அரசு தேர்தல், குளோபல் தமிழ் போரம் கூடி கலந்துரையாடல் என பல்வேறு வழிகளில் உங்களின் கோடிகணக்கான பணம் டொலர்களிலும், பவுண்ஸ்களிலும், யூரோக்களிலும் இந்த 8 மாத காலத்தில் செலவளிக்கப்பட்டுள்ளது. முதலிடப்பட்டுள்ளது. முதலிட முயற்சிகள் நடைபெறுகின்றன.
இதேவேளை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல பினாமிகளும் போராட்டத்தின் பெயரிலான பல கோடிக்களை தம்வசப்படுத்தியுள்ளனர். உதாரணத்துக்கு சில……
கனடாவில் உலகத்தமிழர் இயக்க அலுவலகம் விற்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. விரைவில் அது தொடர்பாக ஆராய்வோம்….
அவுஸ்ரேலியாவில் TCC க்கு உரித்துடைய ஒரு நிலையான சொத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் சேகரிக்கப்பட்ட பல்லாயிரம் யூரோக்களுடன் அகிலன் என்பவர் தலைமறைவு………. இது விரைவில் அம்பலப்படுத்தப்படும்……… காத்திருங்கள்

1 comments:

Anonymous said...

In Germany ober 8 Million Euro missing. It is now under Ahilan, Sentil , Rajan from Liverhusen and Vaheesen Control. NRW Shanker and Makal Kadai Krishna asked for their part and was a big fight with them and now we know that Shankar and Krishna no more with them and opened a shop in Dortmund like TTS.

They invest the money especialy by girls and ladies. This is the new investment stagige.